Posts

Showing posts with the label documentation

விண்வெளி

விண்வெளி எப்பொழுதுமே எமக்கு ஆச்சரியம் ஊட்டுவதாக அமைந்து வந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை விண்வெளியை பார்த்து வியக்காதோர் இல்லை என்றே சொல்லலாம். கோடிக்கணக்கான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கிறது இந்த விண்வெளியில். பால்வெளி, கருந்துளைகள், வேற்றுகிரக வாசிகள் போன்ற புரியாத ஏராளமான மனித சிந்தனைக்கு எட்டாத பல விடயங்களை கொண்டுள்ளது. இந்த கட்டுரையில் விண்வெளி பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.   விண்வெளி எவ்வளவு பெரியது? மிகப் பெரியது. ஆனால் எவ்வளவு? இதனை துல்லியமாக அறிந்து கொள்வது இயலாத காரியம். இதை ஒப்பீட்டளவில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதாவது, சூரியனின் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆல்ஃபா சென்டாரி 41 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. அதற்கு மேல் அளக்க, விஞ்ஞானிகள் ஒளியாண்டுகள் என்ற அலகினைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம். அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள். நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் அகலம், 1.2 லட்சம் ஒளியாண்டுகள். பால்வெளி, ஆண்ட்ரோம...

டைனோசர்கள்

உலகில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்திய உயிரினமான டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிகல்லால் அழிந்து போனதாக அறியப்படுகிறது. இந்த அழிவு பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களுக்கு புதிராக இருந்து வந்தது. இப்போது, 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கழிவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு, இந்த புதிருக்கு ஒரு விடையை வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர்' என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. டைனோசர்கள், உலகம் முழுவதும் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அதிசயமான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட விலங்குகளாகும். அவர்கள் மூன்று முக்கியத்துவமான காலப்பகுதிகளில் வாழ்ந்துள்ளனர்: துவக்கம் (டிரயாசிக் காலம்), மகாபரிணாமம் (ஜூராசிக் காலம்), மற்றும் இறுதிக்கால பரிணாமம் (கிரெட்டேசியஸ் காலம்). இந்த காலங்களில், டைனோசர்கள் வேறுபட்ட வகைகளில் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தனர். டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி எளிதாக இருந்ததா? முற்றிலும் இல்லை. இந்த காலத்தில், பூமி மற்றும் அதன் சூழல் நிலை பெரிய மாற்றங்களின் மூலம்...

சதுரங்கம்

சதுரங்கம் உலகில் உள்ள புத்திசாலிகளின் விளையாட்டு என வர்ணிக்கப்படுகிறது. இவ் விளையாட்டின் தாயகம் இந்தியாவாகும். இன்று உள்ளக விளையாட்டுகளில் சதுரங்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சதுரங்கத்தில் யானை, குதிரை, கோட்டை, மந்திரிகள் என்று நால்வகை சேனைகளைக் கொண்டு விளையாடப்பட்டதால் ஆரம்ப காலங்களில் இது 'சதுரங்க சேனை' என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 'சதுரங்கம்' என பெயர் பெற்றது. இதனை ஆங்கிலத்தில் “செஸ்” எனவும் அழைப்பர். விளையாட்டுகளின் அரசனாக சதுரங்கம் இருப்பதோடு, அக்காலகட்டங்களில் அரசர்களின் விளையாட்டாகவும் சதுரங்கம் இருந்துள்ளது. இதனால்,  'The King of Games, The Game of Kings' ' என இந்த விளையாட்டு வர்ணிக்கப்பட்டது. இந்தியாவில் சதுரங்க விளையாட்டானது, அரசர் காலத்தில் இருந்தே விளையாடப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி 6 ஆம் நூற்றாண்டிலேயே இச் சதுரங்கம் பாரசீகம், சீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. மேலும் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது இந்த சதுரங்கம் ஆடப்படுகிறது. உலகமெங்கும் சதுரங்கம் ஆர்வமுடனும் போ...

குகேஸ்: இளம் சதுரங்க சாம்பியன்

கடந்த சில தினங்களாக நாம் அதிகம் கேள்விபட்ட பெயர்களில் ஒன்றுதான் குகேஸ். “அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.” இது சதுரங்க விளையாட்டில் மிகப்பெரும் வரலாற்றை படைத்துள்ள ஒருவருடைய வார்த்தைகள். சதுரங்க வீரர்களின் பொதுவான கனவாக இருப்பது ஒரு தடவையாவது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதாகும். ஆனால் அதை இளம் வயதிலேயே அடைந்து காட்டியுள்ளார் 18 வயதான குகேஸ், தமிழக வீரரான இவர், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, உலகில் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சாம்பியன்ஸிப் போட்டியின் இளம் போட்டியாளராகத் தேர்வான அவர், தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் இளம் செஸ் வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். உலக சாம்பியன்ஸிப் பட்டத்தை வென்றால் என்ன செய்வீர்கள் என்று சிங்கப்பூரில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, "எனக்குத் தெரியாது, நான் முதலில் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று பதிலளித்தார் குகேஸ். இந்த மகத்தான சாதனைக்கு பின் அவரிடம் இருந்த அர்ப்பணிப்புக்கள், தியா...

உலகின் மிகச்சிறிய நாடுகள்

நாடு என்றால் அது பல்லின மக்கள் அதிகமாக வாழ்கின்ற மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் என்றே நாம் பொதுவாக கருதுவோம். எனினும், மிகவும் சிறிய நிலப்பரப்பில் அமைந்த அரசுரிமை பெற்ற நாடுகளும் உலகில் உள்ளன. ஐரோப்பா, கரீபியன் தீவுகள் மற்றும் பசுபிக் பிராந்தியத்திலேயே இவ்வாறான நாடுகள் பெருபாலும் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை 400 சதுர கிலோமீற்றரிலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டவையாகும். அந்த வகையில், உலகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில், நிலப்பரப்பில் மிகவும் சிறிய நாடுகளாக கருதப்படும் பத்து நாடுகள் பற்றிய விபரம் இங்கே பார்ப்போம். மால்ட்டா  மால்ட்டா இன் பரப்பளவு 316 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்த நாடு, பிரதானமாக கோஸோ, கொமினோ மற்றும் மால்ட்டா என்ற மூன்று தீவுகளை உள்ளடக்கியுள்ளது. மால்ட்டா தீவானது ஏனையவற்றை விட விசாலமானது. இது மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். இங்கு பிரதானமான மொழி மால்ட்டீஸ் ஆகும். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்டைய வரலாற்றினைக் கொண்ட மால்ட்டா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு நாடாகும். இங்கு நிலவும் வெப்பமான காலநிலையும் அழகிய கடற்கரையும் சுற்றுல...

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக பல அரிய நூல்களுடன் இயங்கி வந்த யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையானது. யாழ் நூலகம் ஓரே நாளில் எரிந்துவிடவில்லை. மூன்று தினங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அந்த மூன்று நாட்களும் நூலகம் மட்டும் எரியவில்லை. ஓட்டுமொத்த யாழ் நகரமும் சிதைந்து போனது காடையர்களின் தாக்குதாலால். எரிந்தது நூலகம் மட்டுமல்ல தமிழ் வரலாறுமே தான். உலகின் பல நாடுகள் பிறக்கும் முன்னமே தோன்றிய மொழி தமிழ்.  உலகம் முழுவதிலும் இருந்து தேடி தேடி கொண்டு வந்து சேர்த்த பல நூல்கள், ஓலைச்சுவடிகள் என ஆயிரக் கணக்கான ஆவணங்கள் யாழ் நூலகத்தில் இருந்தன. இன்னும் சொல்வதென்றால் நூலகம் எரிக்கபட்ட சமயத்தில் நூல்களை விட ஓலைச்சுவடிகளே அனேகம் இருந்துள்ளது. நூல்கள் பிறக்க முதலே ஓலைச்சுவடிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சற்று சிந்தித்தால் விளங்கும் அழிக்கபட்டது நூற்றாண்டுகளாக சேகரித்த வரலாறு மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகள் முன்னம் சேகரித்த வரலாறுகள் என்று. பல நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் பலர் வந்து பயன்பெற்று சென்றுள்ளனர். அந்நிய நாட்டவர்களுக்கு தெரிந்த முக்கியதுவம் இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு...

இந்தியா: பாரம்பரியத்தின் புகலிடம்

இந்தியா, தென் ஆசியாவில் அமைந்துள்ள ஒரு பழமையான நாடாகும். 5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. அத்துடன் இரண்டாவது மிகப்பெரிய சனத்தொகையை கொண்ட நாடு. இங்கு பல மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பாரம்பரியங்கள், பல மதங்கள் என்பவற்றை கொண்ட புராதன நாடாகும். பல இராச்சியங்கள் தோன்றி மறைந்துள்ள போதும் இன்னமும் அவை உலகிற்கு அழிக்க முடியாத பல விடயங்களை இன்னும் சுமந்து கொண்டு உள்ளது. வல்லரசு நாடுகளே விண்வெளி ஆராய்சியில் ஆரம்ப கட்டத்தில் இருக்க இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சியையே உருவாக்கிவிட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உலக அரங்கில் இந்தியா வலுவான ஜனநாயக நாடாக விளங்குகிறது. மேலும் உலகளாவிய பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பொருளாதாரத்தில் மட்டுமின்றி கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. தலைநகரம் - புதுடில்லி பிரதமர் - நரேந்திர மோடி அரசாங்கம் - கூட்டாட்சி நாடளுமன்ற அரசியலமைப்பு குடியரசு சுதந்திர தினம் - 15 ஆகஸ்ட் 1947 குடியரசு தினம் - 26 ஜனவரி 1950 நாணயம் - இந்திய ரூபாய் நேர வலயம் ...

தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தலின் அவசியம்

ஆவணப்படுத்தல் என்பது குறிப்பிட்ட சில நிகழ்வுகளை தலைமுறை கடந்தும் அதை தெரியப்படுத்த பேணி பாதுகாக்கும் ஒரு முறை ஆகும். ஆவணப்படுத்தல் நூல்கள், பத்திரிகைகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் போன்ற வடிவங்களிலும் இடம்பெறலாம், ஆவணமாக்கல் முறையானது முற்றுமுழுதாக உண்மைத் தன்மை உடையதாக, உள்ளதை உள்ளபடியாக சொல்வதாக இருக்க வேணடும். வரலாற்றை ஆவணப்படுத்துவதன் மூலம் நம் பழக்கவழக்கங்கள், அரசியல், கலாச்சாரங்கள், வாழ்க்கைமுறை போன்ற அடையாளங்களையும் அறிந்து கொள்ள முடியும். ஒரு இனத்தின் நிலைத்திருப்பிற்கு வரலாறு மிக முக்கியமானதாகும். எந்தவொரு இனம் தனது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சரியாக எடுத்து செல்கிறதோ அந்த இனமே காலமுள்ள வரை நிலைத்து நிற்கும். பண்டைய காலம் தொட்டு இன்று வரை எந்தவொரு இனம் தனது வரலாற்றை பாதுகாக்க தவறுகிறதோ அந்த இனம் காலவோட்டத்தில் காணாமல் போகும் என்பதில் ஐயமில்லை. இன்று தமிழினமும் இவ்வாறான ஒரு துரதிஸ்டமான நிலைக்கு வந்துள்ளமை கவலைக்குரியது. மிக நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட ஒரு இனம் இன்று தனது இருப்பை நிலைநிறுத்த மிக பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் சம...