Posts

Showing posts with the label health

நமக்கு உப்பு ஏன் அவசியம்?

நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான சுவையூட்டிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் முக்கியமான சுவையூட்டி உப்பு ஆகும். உப்பு நமது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அத்துடன் உணவுகளை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்கவும் பயன்படுகிறது. பண்டைய காலங்களில் உப்பானது தங்கம், வெள்ளி என்பவற்றுக்கு சமமாக மதிக்கப்ட்டுள்ளது. உப்பு பெரும்பாலும் கடல் நீரில் இருந்தே கிடைக்கிறது. உப்பு மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல உப்பும் நமது உடலில் அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை பற்றிய விரிவான விபரத்தை கீழே பார்க்கலாம். உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின். "நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல...

சுவையான மருத்துவ குணமும் கொண்ட மாம்பழம்

பழங்களின் அரசன் என அடைமொழி கொண்டு அழைக்கப்படும் பழம் தான் மாம்பழம். இலகுவில் நாம் பெறக்கூடிய பழங்களில் மாம்பழமும் ஓன்று. உலகில் அதிகளவான மக்களால் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் முதன்மையானது மாம்பழமாகும். சித்திரை வைகாசி மாதங்களில் பொதுவாக மாம்பழம் பெருமளவில் கிடைக்கின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவில் மாமரங்களை நாம் காணலாம். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள முக்கனிகளில் ஒன்று தான் இந்த மாம்பழம். இந்த பழம் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய பழமாகவும் உள்ளது. மாம்பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. மாமரம் வங்கதேசத்தின் தேசிய மரமாகவும் உள்ளது. இந்த மாமரங்களின் தோற்றம் இந்தியாவில் இருந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த மாம்பழங்கள் புராண கதைகளில் இருந்து தற்போது வரும் சினிமா பாடல்கள், கவிதைகள் வரை இடம்பெற்றிருப்பது மாம்பழத்திற்கு உண்டான சிறப்பை எடுத்துகூறுகிறது. இன்று உலகம் முழுவதும் பல வகையான இன மாமரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் சேலத்து மாம்பழத்திற்கும் ஈழத்தின் யாழ்ப்பாண மாம்பழத்திற்கும் ஒரு தனி மவுசு எப்பொழுதுமே உண்...

நமக்காகவே தன்னை அர்ப்பணிக்கும் தென்னை

கடல் வழியாக இலங்கைக்கு வரும் ஒரு பயணிக்கு முதலில் தெரிவது வானை முட்டுமளவுக்கு  உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள் நிறைந்த கரையோரப் பகுதியாகும். இலங்கை, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் தென்னை அதிகமாக வளர்கின்றது. எமது நாட்டின் பணப்பயிர்களில் தென்னையும் ஒன்று. அந்தவகையில் எமது நாட்டில் தென்னைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான், தற்போது தெங்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இலங்கை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளது. முழு இலங்கையினதும் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2700 மில்லியனுக்கும் 2900 மில்லியனுக்கும் இடைப்பட்டதாகும். இவற்றில் 80மூ உள்நாட்டுப் பாவனைக்கு உதவுகிறது. இலங்கையரின் உணவில் அவர்களுக்கான 10% புரதத்தையும், 22ம% ஊட்டச்சத்தையும் கொழுப்பையும் தேங்காயே வழங்குகின்றது. இவ்வாறாக ஓர் இலங்கையர் வருடத்திற்கு உணவில் 90 தேங்காய்களையும் ஐந்து போத்தல்கள் எண்ணெய்யையும் சேர்த்துக்கொள்வதாகக் கூறப்படுகின்றது. தேங்காய் மாத்திரமன்றி; தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் அன்றாட தேவைகளுக்காக ஏதோ ஒருவகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, வீட்டுத்தோட்டத்தின் சிறியதோர் இடத்...