Posts

Showing posts from October, 2024

நூற்றாண்டுகள் கடந்த யாழ்ப்பாணக் கோட்டை

இலங்கைத் தீவு நீண்ட நெடிய ஒரு வரலாற்றைக் கொண்ட நாடு. இராமாயண காலந்தொட்டு மிகப் பெரிய வரலாற்று சாட்சியங்களை சுமந்து நிற்கிறது. இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் பல மேற்குலக நாடுகளின் பார்வை ஈழத்தின் மீது விழுந்தது. வணிக, வர்த்தக தொடர்பு, இயற்கை துறைமுகம், ஆசிய நாடுளை கண்காணிக்க ஏதுவான கேந்திர அமைப்பு போன்ற முக்கியத்துவத்தால் போத்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய நாடுகளின் ஆதிக்கதிற்கும் உட்பட்டு வந்துள்ளது. இங்கு தமிழ், சிங்களம் என இரண்டு இன மக்கள் ஒன்றித்து வாழ்கின்றனர். அவ்வப்போது இவ்விரு இனங்களுக்குள்ளும் ஏற்படும் முரண் நிலையில் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கள் சாத்தியமாகியது. 400 ஆண்டுகளுக்கு மேல் மேற்குலக நாடுகளின் கட்டுபாட்டில் சிக்கித் தவித்தது ஈழத் திருநாடு. மேற்குலக நாடுகளின் நாடுகாண் பயணத்தின் விளைவாக இந்த ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமாகின. முதலாவதாக போர்த்துக்கீசர் 1505 இல் இலங்கையின் கரையோர பிரதேசங்களைக் கைப்பற்றினர். அவர்களால் கரையோர பிரதேசங்களை மட்டுமே கைப்பற்றமுடிந்தது. அதன்பின் 1658 வந்த ஒல்லாந்தர்களின் முக்கிய நோக்கம் தங்கள் மதத்தை பரப்புவதே. 1796...

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

வரலாறு நெடுகிலும் பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் தோன்றி தமிழுக்கு அழியா வரம் கொடுத்து வந்துள்ளனர். அந்தவகையில் கடந்த நூற்றாண்டில் நாவல்கள், சிறுகதைகள் என பல பரிமாணத்தில் தன்னை நிரூப்பித்தவர்தான் அமரர் கல்கி கிருஸ்ணமூர்த்தி. சில எழுத்தாளர்களின் மூலம் தமிழே பெருமை கொண்டுள்ளது என்று சொல்லலாம். அதற்கு ஏற்ப சில எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்களின் மூலம் காலம் கடந்தும் சாகா புகழ் பெற்று விளங்குகின்றனர். அவர்களில் ஒருவர் தான் கல்கி. கடந்த நூற்றாண்டில் பல படைப்பாளிகள் தோன்றி இருப்பினும் கல்கி அவர்களுக்கு எப்பொழுதுமே வரலாற்றில் தனி இடம் உண்டு. தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வந்த இருபதாம் நூற்றாண்டை தனது எழுத்துக்களால் கட்டிபோட்டவர். கல்கி அவர்களின் கைவண்ணத்தில் பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றுள் அமரத்துவம் பெற்று விளங்குவது பொன்னியின் செல்வன் ஆகும். வருடங்கள் பல சென்றாலும் மதிப்பு குறையாத ஒரு சில புத்தகங்களில் பொன்னியின் செல்வனும் ஒன்று. எத்தனை முறை வாசித்தாலும் புதிதாக வாசிக்கும் அனுபவத்தையே கொடுக்கும். இந்நாவல் என்னதான் திரைப்படமாக வெளிவந்திருந்தாலும் புத்தகத்தின் மீதான காதலும...