நூற்றாண்டுகள் கடந்த யாழ்ப்பாணக் கோட்டை
இலங்கைத் தீவு நீண்ட நெடிய ஒரு வரலாற்றைக் கொண்ட நாடு. இராமாயண காலந்தொட்டு மிகப் பெரிய வரலாற்று சாட்சியங்களை சுமந்து நிற்கிறது. இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் பல மேற்குலக நாடுகளின் பார்வை ஈழத்தின் மீது விழுந்தது. வணிக, வர்த்தக தொடர்பு, இயற்கை துறைமுகம், ஆசிய நாடுளை கண்காணிக்க ஏதுவான கேந்திர அமைப்பு போன்ற முக்கியத்துவத்தால் போத்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய நாடுகளின் ஆதிக்கதிற்கும் உட்பட்டு வந்துள்ளது. இங்கு தமிழ், சிங்களம் என இரண்டு இன மக்கள் ஒன்றித்து வாழ்கின்றனர். அவ்வப்போது இவ்விரு இனங்களுக்குள்ளும் ஏற்படும் முரண் நிலையில் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கள் சாத்தியமாகியது. 400 ஆண்டுகளுக்கு மேல் மேற்குலக நாடுகளின் கட்டுபாட்டில் சிக்கித் தவித்தது ஈழத் திருநாடு. மேற்குலக நாடுகளின் நாடுகாண் பயணத்தின் விளைவாக இந்த ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமாகின. முதலாவதாக போர்த்துக்கீசர் 1505 இல் இலங்கையின் கரையோர பிரதேசங்களைக் கைப்பற்றினர். அவர்களால் கரையோர பிரதேசங்களை மட்டுமே கைப்பற்றமுடிந்தது. அதன்பின் 1658 வந்த ஒல்லாந்தர்களின் முக்கிய நோக்கம் தங்கள் மதத்தை பரப்புவதே. 1796...