Posts

சேப்பியன்ஸ் - மனித குலத்தின் சுருக்கமான வரலாறு

இஸ்ரேலை சேர்ந்த வரலாற்று முனைவர் யுவால் நேவா ஹராரி உலக வரலாறுகள் குறித்து பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். சேப்பியன்ஸ் நூலில் மனித வளர்ச்சியும் அதன் வரலாற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த நூல் 33 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதே சமயம் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஒன்றுமில்லாத சாதாரண உயிரனமாக இருந்த சேப்பியன்ஸ் எவ்வாறு இந்த உலகையே ஆட்டி வைக்கும் சக்தியாக மாறினான் என்பதை இந்த நூல் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் கூறுகிறது. அதேவேனை நம்மையும் சிந்திக்க வைக்கிறது. நம்ப முடியாத பல தகவல்களையும், புரியாத விடயங்களை பாமர மக்களுக்கும் விளங்கும் படியாக எளிய உதாரணங்கள் மூலம் ஹாரரி விளக்கியுள்ளார். நம்முள் இருக்கும் உலகம் சார்ந்தும், மனித குலம் சார்ந்தும் இருக்கும் பல கேள்விகளுக்கு விடை காணும் நூலே சேப்பியன்ஸ். குரங்கில் இருந்து வந்த மனிதன் எவ்வாறு இந்த உலகை தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தான் என்பதை மிகச் சுருக்கமாக ஒவ்வொரு படிநிலைகளை தெளிவாக கூறுவதே இந்த நூல். அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, மனித குல ஒருங்கிணைப்பு மற்றும...

ஆஸ்திரேலியா : பாலைவன தேசம்

கங்காரு தேசம் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா உலகில் உள்ள ஏழு கண்டங்களில் மிகச் சிறியதும் தீவுகளில் மிகப் பெரியதுமாகும். ஆஸ்திரேலியா எந்த நாட்டுடனும் தன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நாடு சுற்றுலா பயணிகளுக்கு சுவர்க்கமாகும். 16 ஆம் நூற்றாண்டில் தான் ஆஸ்திரேலியா எனும் நாடு உலகத்தின் பார்வைக்கு வந்தது. இந்த நாட்டில் 95 வீதமான இடங்கள் வெறுமையாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் மத்திய பகுதி பாலைவனமாகவே உள்ளது. மக்கள் கரையோர பிரதேசங்களில் மட்டுமே வசிக்கின்றனர். உலகின் சிறந்த கல்விமுறை உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா எட்டாவது இடத்தில் உள்ளது. 200 தொடக்கம் 300 வரையான மொழிகளை பேசும் பழங்குடியின மக்கள் இங்கு வசிக்கின்றனர். தினமும் ஒரு கடற்கரை வீதம் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் பார்வையிட வேண்டுமானால் சுமார் குறைந்தது 32 ஆண்டுகள் தேவைப்படும். இங்குள்ள மக்களை விட விலங்குகளே அதிகம் உண்டு. அதற்கு காரணம் இங்கு பெரும்பாலான இடங்களில் மனித நடமாட்டங்கள் இல்லை.       தலைநகரம் - கான்பெரா பிரதமர் - அந்தோனி அல்பனீசி அரசாங்கம் - மக்களாட்சி சுதந்திர தினம் - 03 மார்ச் 1947 நாணயம் - ஆஸ்த...

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக பல அரிய நூல்களுடன் இயங்கி வந்த யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையானது. யாழ் நூலகம் ஓரே நாளில் எரிந்துவிடவில்லை. மூன்று தினங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அந்த மூன்று நாட்களும் நூலகம் மட்டும் எரியவில்லை. ஓட்டுமொத்த யாழ் நகரமும் சிதைந்து போனது காடையர்களின் தாக்குதாலால். எரிந்தது நூலகம் மட்டுமல்ல தமிழ் வரலாறுமே தான். உலகின் பல நாடுகள் பிறக்கும் முன்னமே தோன்றிய மொழி தமிழ்.  உலகம் முழுவதிலும் இருந்து தேடி தேடி கொண்டு வந்து சேர்த்த பல நூல்கள், ஓலைச்சுவடிகள் என ஆயிரக் கணக்கான ஆவணங்கள் யாழ் நூலகத்தில் இருந்தன. இன்னும் சொல்வதென்றால் நூலகம் எரிக்கபட்ட சமயத்தில் நூல்களை விட ஓலைச்சுவடிகளே அனேகம் இருந்துள்ளது. நூல்கள் பிறக்க முதலே ஓலைச்சுவடிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சற்று சிந்தித்தால் விளங்கும் அழிக்கபட்டது நூற்றாண்டுகளாக சேகரித்த வரலாறு மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகள் முன்னம் சேகரித்த வரலாறுகள் என்று. பல நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் பலர் வந்து பயன்பெற்று சென்றுள்ளனர். அந்நிய நாட்டவர்களுக்கு தெரிந்த முக்கியதுவம் இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு...

த டாவின்சி கோட்

2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத் துப்பறிவுப் புனைவு நாவலாகும். இவர் த்ரில்லர் வகை நாவல்களை எழுவதில் கைதேர்ந்தவர். இவருடைய நாவல்கள் அனைத்துமே பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் விற்பனையாகி வருகிறது. இவருடைய நாவல்களில் அறிவியல், கலை, வரலாறு மற்றும் சமய மரபுகள் என்பன முக்கிய இடம்பெற்றிருக்கும். நுட்பமான எழுத்துக்களால் வாசகர்களை தம்வசப்படுத்திவிடுவார். இவருடைய படைப்புக்களில் த டாவின்சி கோட் மிகப்பிரபலமானது. உலகமெங்கும் இதுவரை 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப் புத்தகமாகும். அத்துடன் 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துப்பறிதல், திகில் மற்றும் அறிவியலுடன் ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் கதை நகர்கிறது. இந்நாவல் பிரவுனின் இரண்டாவது நாவலாகும். அவரது முதலாவது நாவல், 2000 ஆண்டு வெளிவந்த நாவலான ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ் ஆகும். 2006 இல், இந்நாவல் த டாவின்சி கோட் எனும் பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கால கட்டத்தில் அதிக வசூலை செய்த படமாகவும் டாவின்சி கோட் இருந்துள்ளது. இதுவும் திரைப்படமாக வந்தாலும் நாவல...