Posts

விண்வெளி

விண்வெளி எப்பொழுதுமே எமக்கு ஆச்சரியம் ஊட்டுவதாக அமைந்து வந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை விண்வெளியை பார்த்து வியக்காதோர் இல்லை என்றே சொல்லலாம். கோடிக்கணக்கான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கிறது இந்த விண்வெளியில். பால்வெளி, கருந்துளைகள், வேற்றுகிரக வாசிகள் போன்ற புரியாத ஏராளமான மனித சிந்தனைக்கு எட்டாத பல விடயங்களை கொண்டுள்ளது. இந்த கட்டுரையில் விண்வெளி பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.   விண்வெளி எவ்வளவு பெரியது? மிகப் பெரியது. ஆனால் எவ்வளவு? இதனை துல்லியமாக அறிந்து கொள்வது இயலாத காரியம். இதை ஒப்பீட்டளவில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதாவது, சூரியனின் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆல்ஃபா சென்டாரி 41 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. அதற்கு மேல் அளக்க, விஞ்ஞானிகள் ஒளியாண்டுகள் என்ற அலகினைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம். அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள். நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் அகலம், 1.2 லட்சம் ஒளியாண்டுகள். பால்வெளி, ஆண்ட்ரோம...

டைனோசர்கள்

உலகில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்திய உயிரினமான டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிகல்லால் அழிந்து போனதாக அறியப்படுகிறது. இந்த அழிவு பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களுக்கு புதிராக இருந்து வந்தது. இப்போது, 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கழிவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு, இந்த புதிருக்கு ஒரு விடையை வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர்' என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. டைனோசர்கள், உலகம் முழுவதும் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அதிசயமான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட விலங்குகளாகும். அவர்கள் மூன்று முக்கியத்துவமான காலப்பகுதிகளில் வாழ்ந்துள்ளனர்: துவக்கம் (டிரயாசிக் காலம்), மகாபரிணாமம் (ஜூராசிக் காலம்), மற்றும் இறுதிக்கால பரிணாமம் (கிரெட்டேசியஸ் காலம்). இந்த காலங்களில், டைனோசர்கள் வேறுபட்ட வகைகளில் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தனர். டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி எளிதாக இருந்ததா? முற்றிலும் இல்லை. இந்த காலத்தில், பூமி மற்றும் அதன் சூழல் நிலை பெரிய மாற்றங்களின் மூலம்...

நமக்கு உப்பு ஏன் அவசியம்?

நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான சுவையூட்டிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் முக்கியமான சுவையூட்டி உப்பு ஆகும். உப்பு நமது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அத்துடன் உணவுகளை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்கவும் பயன்படுகிறது. பண்டைய காலங்களில் உப்பானது தங்கம், வெள்ளி என்பவற்றுக்கு சமமாக மதிக்கப்ட்டுள்ளது. உப்பு பெரும்பாலும் கடல் நீரில் இருந்தே கிடைக்கிறது. உப்பு மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல உப்பும் நமது உடலில் அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை பற்றிய விரிவான விபரத்தை கீழே பார்க்கலாம். உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின். "நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல...

அமெரிக்கா : உலகின் வல்லரசு

உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடு தான் ஐக்கிய அமெரிக்கா. உலக நாடுகளுக்கு எல்லாம் முதன்மையானதாக காணப்படும் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ மொழி கிடையாது. இந்த நாட்டின் முக்கிய சின்னமாக விளங்கும் 151 அடி உயரமான சுதந்திர தேவி சிலையை 1886 ஆம் ஆண்டு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கியது. உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்று, மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பு, அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சி என சகல துறைகளிலும் தன்னை நன்கு தகவமைத்து உலகின் வல்லரசாக உயர்ந்துள்ளது. இங்குள்ள அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதை தங்கள் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அமெரிக்கர்கள் தங்கள் முகம் ஒரு தடவையாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரவேண்டும் என ஆசை கொண்டவர்கள். இவர்கள் தன்னார்வல பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும், அதிக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. வருடத்திற்கு சுமார் 15000 கொலைகள் நடைபெறுகிறது. அமெரிக்கர்கள் எவ்வாறு சாதரணமாக அனைவரும் கைத்தொலைபேசியை பாவிப்பார்களோ அதேபோல துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அத்துடன் மருத்துவத் துறையில் பல சிறிய நாடுக...